விளக்கின் வெளிச்சம்,
தூக்கம் இல்லை.
விளக்கணைத்த பின்னர்
சூழ்ந்த இருட்டும்
கண்ணை இருட்டவில்லை.
போர்வையும் போர்த்தினேன் -
இமை மூடிய
இருட்டும் போதாததால்.
மூடிய இமைக்கும்,
போர்த்திய போர்வைக்கும்,
இடையில் சிரிக்கும் என்
வெளிச்சக் காதலியை
எப்படித் துரத்தி
என் உறக்கத்தை
அணைப்பேன்?
1 comment:
நல்லாயிருக்கு பாராட்டுக்கள்.
Post a Comment
உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ சொன்னலொழிய எனக்குத் தெரியாது.