இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அனைத்து விதமான காரணங்களுக்காகவும்: இசை, பாடகர்கள், நடிக நடிகையர், நடனம், கவிஞர், படப்பிடிப்பு, கவித்துவம், போன்ற அனைத்திற்கும்! நான் இங்கே காட்டப் போவது ஒரு சில வரிகள் மட்டும்தான். இந்த வரிகள் எந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன என்று சொல்லப் போவதில்லை.
*****
"தாமரை மலர் கொண்டு
உடல் செய்த ஓவியமே,
என்னுடல் பாரம் மட்டும்
எந்த விதம் தாங்குகிறாய்?"
"மீன்களைச் சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை;
காதலைச் சுமக்கையிலே
காதலனும் பாரமில்லை!"
*****
இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களைத் தூசு தட்டி நான்
நல்ல வீடு செய்வேன்.
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப் போய்விடில் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் கொண்டே உயிர் தருவேன்.
ஏ ராஜா... இது மெய்தானா?
ஏ ராணி,
தினம் நீ செல்லும்
பாதையில் முள்ளிருந்தால் நான்
பாய் விரிப்பேன் என்னை...
நான் நம்புகிறேன் உன்னை!!
*
நீச்சல் குளமிருக்க
நீரும் இல்லை இனி
எங்கு நீச்சல் அடிப்பேன்?!
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க!!!
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு!!
பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்...
ஏ ராணி...
அந்த இந்திர லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம்...
உன் அன்பு அது போதும்!!!
*****
தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே...
நீ நீரில் ஒளியாதே!!
தினம் தினம் ஒரு சூரியன் போல
வருவேன் வருவேன்...
அனுதினம் உன்னை
ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்!
சூரியனே, சூரியனே
தாமரை முகவரி தேவையில்லை!!
விண்ணில் நீயே இருந்து கொண்டே
விரல் நீட்டித் திறக்கிறாய்!
மரங்கொத்தியே, மரங்கொத்தியே!
மனதைக் கொத்தித் துளையிடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்துத்
தூங்கும் காதல் எழுப்புவாய்!!
*****
இப்போது நினைத்தால் அவ்வளவு பாடல்கள் நினைவிற்கு வருகிறது... இன்றைக்கு இது போதும்... ஒரே ஒரு வருத்தம் தான் -- இதில் என்னுடைய சொந்த சரக்கு எதுவும் இல்லை என்பதுதான்.. அதனால் என்ன, என்னால் முடிந்த வரை என்னுடைய ரசனையை வெளிப்படுத்துகிறேனே, அது போதும் எனக்கு.
மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடன் மதி.
*****
"தாமரை மலர் கொண்டு
உடல் செய்த ஓவியமே,
என்னுடல் பாரம் மட்டும்
எந்த விதம் தாங்குகிறாய்?"
"மீன்களைச் சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை;
காதலைச் சுமக்கையிலே
காதலனும் பாரமில்லை!"
*****
இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களைத் தூசு தட்டி நான்
நல்ல வீடு செய்வேன்.
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப் போய்விடில் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் கொண்டே உயிர் தருவேன்.
ஏ ராஜா... இது மெய்தானா?
ஏ ராணி,
தினம் நீ செல்லும்
பாதையில் முள்ளிருந்தால் நான்
பாய் விரிப்பேன் என்னை...
நான் நம்புகிறேன் உன்னை!!
*
நீச்சல் குளமிருக்க
நீரும் இல்லை இனி
எங்கு நீச்சல் அடிப்பேன்?!
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க!!!
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு!!
பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்...
ஏ ராணி...
அந்த இந்திர லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம்...
உன் அன்பு அது போதும்!!!
*****
தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே...
நீ நீரில் ஒளியாதே!!
தினம் தினம் ஒரு சூரியன் போல
வருவேன் வருவேன்...
அனுதினம் உன்னை
ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்!
சூரியனே, சூரியனே
தாமரை முகவரி தேவையில்லை!!
விண்ணில் நீயே இருந்து கொண்டே
விரல் நீட்டித் திறக்கிறாய்!
மரங்கொத்தியே, மரங்கொத்தியே!
மனதைக் கொத்தித் துளையிடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்துத்
தூங்கும் காதல் எழுப்புவாய்!!
*****
இப்போது நினைத்தால் அவ்வளவு பாடல்கள் நினைவிற்கு வருகிறது... இன்றைக்கு இது போதும்... ஒரே ஒரு வருத்தம் தான் -- இதில் என்னுடைய சொந்த சரக்கு எதுவும் இல்லை என்பதுதான்.. அதனால் என்ன, என்னால் முடிந்த வரை என்னுடைய ரசனையை வெளிப்படுத்துகிறேனே, அது போதும் எனக்கு.
மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடன் மதி.
No comments:
Post a Comment
உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ சொன்னலொழிய எனக்குத் தெரியாது.