Sunday, June 12, 2011

தூக்கம்

விளக்கின் வெளிச்சம்,
தூக்கம் இல்லை.
விளக்கணைத்த பின்னர்
சூழ்ந்த இருட்டும்
கண்ணை இருட்டவில்லை.
போர்வையும் போர்த்தினேன் - 
இமை மூடிய
இருட்டும் போதாததால்.
மூடிய இமைக்கும், 
போர்த்திய போர்வைக்கும், 
இடையில் சிரிக்கும் என்
வெளிச்சக் காதலியை 
எப்படித் துரத்தி
என் உறக்கத்தை
அணைப்பேன்?



1 comment:

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ சொன்னலொழிய எனக்குத் தெரியாது.